×

ஊட்டியில் ஐயப்பன் தேர் பவனி

ஊட்டி, டிச. 22: ஊட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தேர் பவனி நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வடம் பிடித்து தேர்பவனியை துவக்கி வைத்தார். ஊட்டியில்   ஐயப்பன் கோயில் 65ம் ஆண்டு விழா மற்றும் தேர் பவனி நேற்று காலை  துவங்கியது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேர்பவனியை துவக்கி  வைத்தார். தொடர்ந்து ஐயப்பன் ஊட்டி நகரில் உள்ள கமர்சியல் சாலை, லோயர்  பஜார் சாலை, மாரியம்மன் கோயில் வழியாக மீண்டும் ஐயப்பன் கோயிலை  சென்றடைந்தது. செண்டை மேளம் முழங்க ஐயப்பன் நகரை வலம் வந்தார். இதில்,  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மதியம் அன்னதான நிகழ்ச்சி  நடந்தது. இதில், மாவட்ட நீதிபதி வடமலை, எஸ்பி., சசிமோகன் உட்பட  ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Iyappan Chari Bhavani ,Ooty ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...